நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் பணத்தை சுருட்டுவதற்காக காங்கிரசும், பாரதிய ஜனதாவும் கை கோர்த்து செயல்படுவதாக அரவிந்த கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். டுவிட்டர் சமூக வலைதளத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும், பாஜக தலைவர் நிதின் கட்கரி ஆகியோரின் இல்லத்தை நாளை மறுதினம் முற்றுகையிடப் போவதாக கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக நாளை மறுதினம் காலை 10 மணி அளவில் டெல்லி ஜந்தர்மந்தரில் கூடவுள்ளதாகவும் வலைதளத்தில் அவர் எழுதியுள்ளார். நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டால், அரசுக்கு ஒரு லட்சத்து 83 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தலைமை கணக்கு தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
* News From http://puthiyathalaimurai.tv(24-Aug-2012)
http://www.makkalsanthai.com/
0 comments:
Post a Comment