Friday 24 August 2012

இணையதளங்கள் வதந்தி பரப்பும் விவகாரம் : இந்தியாவுக்கு அமெரிக்கா பதில்


உள்நாட்டு பாதுகாப்போடு இணையதளங்களுக்கு உள்ள சுதந்திரத்தையும் இந்தியா உறுதி செய்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அறிவுரை கூறியுள்ளது.

அமெரிக்க செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலண்ட் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார். சமீபத்தில் அஸ்ஸாம் உள்பட வடகிழக்கு மாநிலத்தவர் பல்வேறு மாநிலங்களில் இருந்து வெளியேறியது தொடர்பாக ட்விட்டர் சமூக இணையதளத்தில் வதந்தி பரப்பிய நபர்களின் முகவரியை முடக்க வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது.

இதுபற்றி கருத்து தெரிவித்த நுலண்ட், உள்நாட்டு பாதுகாப்பும், இணைய தள சுதந்திரமும் சமநிலையில் இருக்க வேண்டும் என்று கூறிய நுலண்ட், உள்நாட்டு பாதுகாப்பு விஷயத்திற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் இணையதளங்களுக்கு உள்ள சுதந்திரத்தை பறிக்கும் வகையில் இருக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.

கருத்து சுதந்திரத்தை மதிக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் கொள்கை என்றும், இந்த விஷத்தில் இந்திய அரசுக்கு முடிந்தளவு உதவத் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* News From http://puthiyathalaimurai.tv(24-Aug-2012)
http://www.makkalsanthai.com/


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More