Friday 24 August 2012

நான்காவது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்


நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டுக்கு பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் இன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டன.



இதனால் இன்று காலை அவை கூடிய சிறிது நேரத்திற்குள்ளாகவே இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இதனால், தொடர்ந்து நான்காவது நாளாக இரு அவைகளும் முடக்கப்பட்டுள்ளன. நிலக்கரிச் சுரங்க முறைகேடு தொடர்பாக அரசுக்கு ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பிரதமர் பதவி விலக வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தி வருகிறது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவையை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


* News From http://puthiyathalaimurai.tv(24-Aug-2012)
http://www.makkalsanthai.com/


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More