Thursday 6 September 2012

இலங்கை ராணுவத்தின் 450 வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி


புதுடில்லி: "இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு, இந்தியாவில், தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது' என, ராஜ்யசபாவில், மத்திய ராணுவ அமைச்சர் அந்தோணி தெரிவித்தார்.

தமிழகத்தில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடாது என, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார். ஆனால், அதற்கு மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று ராஜ்யசபாவில், தி.மு.க., - எம்.பி., கனிமொழி எழுத்து மூலமாக கேட்ட கேள்விக்கு, மத்திய ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி அளித்த பதிலில், "இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த இரு வீரர்களுக்கு, தமிழ்நாட்டில் வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்பது உண்மை தான். இலங்கை உட்பட நமது அண்டை நாடுகளின் ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி பரிமாறப்படுவது வழக்கமான ஒன்று தான்' என்று குறிப்பிட்டு இருந்தார். இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த, 450க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு, நாட்டில் பல மாநிலங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், "தமிழ்நாட்டில் வெலிங்டன், கர்நாடகாவில் பெங்களூரு மற்றும் பெல்காம், கேரளாவில் கண்ணூர் ஆகிய இடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது' என, ராணுவ அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

www.dinamalar.com (6 September 2012 )
http://www.makkalsanthai.com/


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More