ரோடாக்: ""வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு, மொபைல்போன் வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதன் மூலம், மற்றொரு "மெகா' ஊழலுக்கு தயாராகி வருகிறது,'' என, அரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா தெரிவித்துள்ளார்.அரியானா மாநிலம், லடயானில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற சவுதாலா பேசியதாவது:நம் நாட்டில், இரண்டு வேளை சாப்பாட்டிற்காக, ஏழை மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில், அவர்களுக்கு "மொபைல்போன்' வழங்கப்படும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது, ஏழை மக்களை ஏளனப்படுத்தும் செயல்.ஏழை மக்களுக்கு <உணவு கிடைக்க என்ன செய்ய வேண்டுமோ, அதற்குத் தான் முக்கியத்துவம் தரப்பட வேண்டும். மாறாக, "மொபைல்போன்' போன்ற ஆடம்பரப் பொருட்களை அவர்களுக்கு வழங்குவதால், எந்தப் பயனும் ஏற்பட்டு விடாது. அப்படி, இலவசமாக போன் வழங்கினாலும், அவர்களிடமிருந்து, "ரீ சார்ஜ்' என்ற பெயரில், மொபைல்போன் நிறுவனங்கள் கட்டணம் வசூலித்துவிடும். இதன்மூலம், மிகப் பெரிய ஊழலுக்கு மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது என்பது தெளிவாகிறது.இவ்வாறு சவுதாலா பேசினார்.இதற்கிடையில், சவுதாலா மீதான ஊழல் வழக்கை நடத்துவதற்கு, சி.பி.ஐ., பரிந்துரை செய்துள்ளதாக, நேற்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. கடந்த 2003-04ம் ஆண்டு, அரியானாவில், சவுதாலா முதல்வராக இருந்த போது, மாநில அரசு அதிகாரிகளில் இருந்து, ஐ.ஏ.எஸ்., பணிக்குத் தேர்வு செய்வதில் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்த போது, சி.பி.ஐ., சவுதாலா மீது வழக்கை பதிவு செய்ய பரிந்துரை செய்தது.
www.dinamalar.com (6 September 2012 )
http://www.makkalsanthai.com/
www.dinamalar.com (6 September 2012 )
http://www.makkalsanthai.com/
0 comments:
Post a Comment