பாட்னா: 2014ம் ஆண்டு நடைபெற உள்ள பார்லிமென்ட் தேர்தலில் நான் பிரதமர் வேட்பாளர் அல்ல என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
மோடியை நிறுத்தாதீங்க...! தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை முன்னிறுத்தக் கூடாது என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கடந்த 25-ந் தேதியன்று பாஜக தலைவர் நிதின்கட்காரியை நேரில் சந்தித்த போது, இது தொடர்பாக விவாதித்திருக்கிறார். மேலும் மதச்சார்ப்பற்ற ஒருவரைத்தான் பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
பா.ஜ.,வுக்கு நெருக்கடி: இந்நிலையில் இன்று பிரதமர் வேட்பாளர் குறித்து பேட்டியளித்த நிதிஷ்குமார், கூட்டணி சார்பில் தேர்தலை சந்திக்கும் போது, கூட்டணியை தலைமை தாங்கும் கட்சி வேட்பாளரை அறிவிக்க வேண்டும். அப்போது தான் வேட்பாளர் குறித்து மக்கள் விவாதித்தும், ஆலோசித்தும் எடை போட முடியும். இது போன்று பல மாநில தேர்தல்களை நான் பார்த்துள்ளேன். கடந்த பார்லிமென்ட் தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி அத்வானியின் பெயரை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது. பிரதமர் வேட்பாளராக நான் போட்டியிட விரும்பவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மதசார்புடையவரை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதை நான் விரும்பவில்லை. ஒரு வேளை மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால், ஐக்கிய ஜனதா தளம் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகும் என்று கூறினார்.
*News From http://www.dinamalar.com(08-Aug-2012)
http://www.makkalsanthai.com/
0 comments:
Post a Comment